Saturday, September 24, 2011

பிரான்ஸில் முகத்தை மூடிய இரு முஸ்லிம் பெண்களுக்கு அபராதம்


பொது இடங்களில் முகத்தை மூடி உடை அணிந்திருந்த முஸ்லிம் பெண்களான ஹிந்த அஹ்மாஸ் மற்றும் நஜாத் நைத்தாலி ஆகிய இருவருக்கும் பிரான் நீதிமன்ற அபராதம் விதித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிந்த அஹ்மாஸுக்கு 120 யூரோவும் (164 டொலர்), நஜாத் நைத்தலிக்கு 80 யூரோவும் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஹிந்த அஹ்மாஸ், இது ஒரு மனித உரிமை மீறலாகும். ஆகவே, தான் ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்தார். மேலும் அவர் பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இங்கு தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைப் பற்றி நான் கவலைப் படவில்லை, மாற்றமாக ஒரு பெண் தன்னுடைய மத நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கு தடைவிதித்தமைக்கு எதிராகவே தான் உயர் மனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment